Wednesday, 30 April 2014

எங்கிருக்கிறாய் நீ

எங்கிருக்கிறாய் நீ
எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ

தாயாய் தோழியாய்

மனைவியாய் குழந்தையாய் - உனக்கு

நான் இருக்க விழைகிறேன்

எனவே சொல்

எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ

சின்ன சின்னதாய் கதை பேச...

கோபம் கொண்டு சிணுங்க...

திகட்ட திகட்ட காதல் செய்ய...

உன் அழுக்கு சட்டையை

துவைக்கும் பொழுது

திட்டி கொண்டே உன்னை கொஞ்ச...

நேரம் தாண்டி வரும் பொழுது

வாசல் மறித்து மணி காட்ட....

உனக்கு பிடித்த சமையலுடன்

உன் வருகைக்காக காத்திருக்க....

வாகனத்தின் பின் கட்டில்

மலராய் நான் அமர

புயலாய் நீ செலுத்த....

அவ்வழகில் நான் அசர

இப்படியே ஆயிரம் ஆயிரம்

ஆசைகள் என்னுள் ......

எனவே சொல் காதலனே

எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ !????

No comments:

Post a Comment