இந்த இலை
என்னை தொட்ட இலை
என்று எப்படி தெரியும் என்றேன்
சருகாகி பறந்த இலை
உன்னை தாண்டி வருகையில்
பச்சையாய் இருக்கிறது என்றாய்
நீ காதலிக்க ஆரம்பித்துவிட்டாய்
என்பதன் மிகச்சிறந்த அறிகுறியே இந்தப்பொய்
00
மழைக்காலத்தில்
நீர் சேமித்து வைத்து
உயிர் வாழும் பாலைவனத்து செடி போல
நீ பேசிய மிச்சத்தை வைத்து வாழ்கிறேன் நான்
00
கண்களை திறந்து மழை துளியை
பெறுவது எப்படியோ
அப்படித்தான் உன் மீதான என் காதல்
00
தாமதமாக வராதே
என்று எதனை முறை சொல்லிருக்கிறேன்
என்றபடி உன்னை முறைத்தேன்
நான் சரியான நேரத்திற்கு வந்தால்
நீ வேற எதாவது செய்து கொண்டிருப்பாய்
தாமதமாக வந்தால்தான்
நீ எனக்காக காத்திருப்பாய்
என் செல்ல காதலி என்றாய்.
என்னவோ போ
நீ பொய் சொன்னால் கூட
நன்றாகத்தான் இருக்கிறது
00
உன் கவிதைகளை
வாசித்து வாசித்து
நானும் கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
என்றேன்
நானும் உன்னைப்போல் தான்
உன் கண்களை வாசித்து வாசித்தே
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
என்றாய் நீ
00
சற்று இடைவெளி விட்டு அமரென்
நமக்கு நடுவில் இடம் கேட்டு அடம் பிடிக்கிறது
"காதல்"
00
இரகசியம் காக்கும்
தேவதை போல்
உன்னை சுமக்கும்
இதயத்தை
உடல் கொண்டு மூடி பாதுகாக்கிறேன்
00
என்னை தொட்ட இலை
என்று எப்படி தெரியும் என்றேன்
சருகாகி பறந்த இலை
உன்னை தாண்டி வருகையில்
பச்சையாய் இருக்கிறது என்றாய்
நீ காதலிக்க ஆரம்பித்துவிட்டாய்
என்பதன் மிகச்சிறந்த அறிகுறியே இந்தப்பொய்
00
மழைக்காலத்தில்
நீர் சேமித்து வைத்து
உயிர் வாழும் பாலைவனத்து செடி போல
நீ பேசிய மிச்சத்தை வைத்து வாழ்கிறேன் நான்
00
கண்களை திறந்து மழை துளியை
பெறுவது எப்படியோ
அப்படித்தான் உன் மீதான என் காதல்
00
தாமதமாக வராதே
என்று எதனை முறை சொல்லிருக்கிறேன்
என்றபடி உன்னை முறைத்தேன்
நான் சரியான நேரத்திற்கு வந்தால்
நீ வேற எதாவது செய்து கொண்டிருப்பாய்
தாமதமாக வந்தால்தான்
நீ எனக்காக காத்திருப்பாய்
என் செல்ல காதலி என்றாய்.
என்னவோ போ
நீ பொய் சொன்னால் கூட
நன்றாகத்தான் இருக்கிறது
00
உன் கவிதைகளை
வாசித்து வாசித்து
நானும் கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
என்றேன்
நானும் உன்னைப்போல் தான்
உன் கண்களை வாசித்து வாசித்தே
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
என்றாய் நீ
00
சற்று இடைவெளி விட்டு அமரென்
நமக்கு நடுவில் இடம் கேட்டு அடம் பிடிக்கிறது
"காதல்"
00
இரகசியம் காக்கும்
தேவதை போல்
உன்னை சுமக்கும்
இதயத்தை
உடல் கொண்டு மூடி பாதுகாக்கிறேன்
00
No comments:
Post a Comment