Wednesday, 30 April 2014

தோழி

முகம் முழுக்க நேசத்தை
பரத்திக்கொண்டு நீ வரும்போது
பேச்சற்று தான் போகிறது
எப்போதும் எனக்கு....
நீயோ பாசாங்கற்ற மொழியை
பக்குவமாய் சொல்லிச்செல்கிறாய்.......
நான் இருக்கும் அறையில்
நிரம்பி வழிகிறது
பிரியம் ததும்பும் உன் குரல்----
நானோ தீரா நேரத்தை
மௌனத்தில் புதைக்கிறேன்
சில உன்னதங்களை
சொல்லி தெரியவேண்டியதில்லையே
உணர்வாய நீ என் மௌனம் மனசாய்
விரிந்து கிடப்பதை

No comments:

Post a Comment