உன் கவிதைகளுக்கினி பாடு பொருளாய்
நானிருக்க போவதில்லை
நாம் எப்பொழுதும் சந்திக்கும்
மஞ்சணத்திப்பூ மரத்தடியில்
நீ மல்லிகைகள் சேகரிக்க வேண்டியதில்லை
என் நகத்தழும்பை தடவிப்பார்த்து
நீ சிரிக்கப்போவதில்லை
நான் உடுத்தும் அதே நிறத்தில்
நீயும் உடுத்தி அனிச்சையாய் உடுத்தியதாய்
பொய் சொல்லி என்னை மகிழ்விக்க அவசியமில்லை
நான் கேரளத்தேயிலைகொண்டு
தயாரிக்கும் தேநீருக்கு
அமுதம் என்று பெயர்சூட்டத்தேவையில்லை
இனி தாமதமாய் வருவதற்கு
காரணம் யோசிக்கத்தேவையில்லை
நாம் செல்லும் பாதையில்
கைகள் உரசுகையில் உண்டாகும்
மின்சாரத்தை தனியே செல்லுகையில்
யோசித்துப்பார்த்து சிரிக்கத்தேவையில்லை
இனி என் "ம்" களுக்கும் "ச்" களுக்கும்
அர்த்தம் ஆராயவேண்டிய அவசியமில்லை
இனி நொடிக்கொருமுறை என்னை
"டீ" போடப்போவதில்லை
கண்ணீர் மோதி உடைந்த
நம் காதலை இனி நீயோ, நானோ
திரும்ப எடுக்கப்போவதில்லை
இறுதியாய் சொல்கிறேன்
அன்று நாம் பார்த்த அதே நிலவை
இனி என்றுமே நீ பார்க்கப்போவதேயில்லை
நானிருக்க போவதில்லை
நாம் எப்பொழுதும் சந்திக்கும்
மஞ்சணத்திப்பூ மரத்தடியில்
நீ மல்லிகைகள் சேகரிக்க வேண்டியதில்லை
என் நகத்தழும்பை தடவிப்பார்த்து
நீ சிரிக்கப்போவதில்லை
நான் உடுத்தும் அதே நிறத்தில்
நீயும் உடுத்தி அனிச்சையாய் உடுத்தியதாய்
பொய் சொல்லி என்னை மகிழ்விக்க அவசியமில்லை
நான் கேரளத்தேயிலைகொண்டு
தயாரிக்கும் தேநீருக்கு
அமுதம் என்று பெயர்சூட்டத்தேவையில்லை
இனி தாமதமாய் வருவதற்கு
காரணம் யோசிக்கத்தேவையில்லை
நாம் செல்லும் பாதையில்
கைகள் உரசுகையில் உண்டாகும்
மின்சாரத்தை தனியே செல்லுகையில்
யோசித்துப்பார்த்து சிரிக்கத்தேவையில்லை
இனி என் "ம்" களுக்கும் "ச்" களுக்கும்
அர்த்தம் ஆராயவேண்டிய அவசியமில்லை
இனி நொடிக்கொருமுறை என்னை
"டீ" போடப்போவதில்லை
கண்ணீர் மோதி உடைந்த
நம் காதலை இனி நீயோ, நானோ
திரும்ப எடுக்கப்போவதில்லை
இறுதியாய் சொல்கிறேன்
அன்று நாம் பார்த்த அதே நிலவை
இனி என்றுமே நீ பார்க்கப்போவதேயில்லை
No comments:
Post a Comment