Wednesday, 30 April 2014

உனக்கான நான்

நீ வந்து சென்றதிலிருந்து
நான் கட்டியணைத்துத்தூங்கும்
கரடி பொம்மையை காணோம்
ஆனால் தேடத்தோன்றவில்லை
காரணம் உனக்கு சொல்லவும் தேவையில்லை .....

00

சொற்களை கஷ்டப்பட்டு கோர்த்து
உன்னிடம் சொல்ல வரும்போதெல்லாம்
ஒரு பார்வையால் என்னை தடுமாறவைத்து
அத்தனை சொற்களையும் கொட்டிவிடுகிறாய்
இனி நீயே சென்று பொறுக்கிக்கொள்
என் செல்ல பொறுக்கி.....

00

எனக்கே தெரியாமல்
என்னை காதல் சுமக்க வைத்து
அதை வலிக்காமல் பிரசவிக்கவும் வைத்துவிட்டாய்
உன் ஒற்றை புன்னகையில் ......
உண்மையில் நீ சிறந்த மருத்துவன் தான் போ !!!

00

நான் உன் மீது புகார் செய்ய வேண்டும்
என் செல்ல நாய் குட்டிக்கு உடம்பு சரி இல்லை
நீ இருக்கையில் நான் அதை கொஞ்சியதை
பார்த்து நீ விட்ட உஷ்ணப்பெருமூச்சால்
தான் அதற்கு காய்ச்சல் வந்திருக்க வேண்டும் .....

No comments:

Post a Comment