சிறுவயதில் என்னை
தூக்கிக் கொஞ்சும் பொழுது
மீசைக்குத்தி நான் அழுததிலிருந்து
என்னை முத்தமிட்டதே இல்லையாம் அப்பா
இன்று அம்மா
"இந்த வரனைப்பரு "
என்று காட்டிய புகைப்படத்தை பார்த்து
"என்னப்பா இது மாப்பிள்ளைக்கு
மீசையே இல்ல !?"
என்றேன் .....
அம்மா அப்பாவை பார்த்து
சூசகமாய் சிரித்ததையும்
அப்பா விழித்ததையும்
கவனிக்க தவறவில்லை நான்....:)
No comments:
Post a Comment